சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-01 05:56 GMT

பிரச்சாரம் 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை, கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News