சேலத்தில் நாளை கல்விக்கடன் முகாம்

சேலத்தில் நாளை கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்தார்.

Update: 2024-02-14 11:08 GMT

மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி 

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்காவில் கல்விக்கடன் மேளா நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம். ஏற்கனவே வங்கிகளில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு நகல்கள், சாதி, வருமான சான்று நகல்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். 44 வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் வழங்கும் கல்விக்கடன் விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலித்து கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News