''கொள்ளையில்லாத ஆட்சி கொள்ளையில்லாத ஆட்சி ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா'' - நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

கொள்ளை இல்லாத ஆட்சி நடைபெற வேண்டுமானால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் ஜக்கம்மா சொல்றா என்று குடுகுடுப்பைக்காரர்மூலம் குடுகுடுப்பை அடித்து திமுகவினர் நூதன முறையில் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வீடியோ வைரல்:

Update: 2024-02-23 06:29 GMT

நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம் 

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மருத்துவ அணி சார்பில் குடுகுடுப்பைக்காரர் மூலம் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி நகர மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான செல்வராஜ் மற்றும் மருத்துவ அணி துணை தலைவர் சதீஷ் சத்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் குடுகுடுப்பைக்காரர் வாயிலாக திமுகவுக்கு வாக்களிக்க கோரி பல்வேறு வீதிகளில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் கொள்ளை இல்லாத ஆட்சி நடைபெற வேண்டுமென்றால் மு. க ஸ்டாலினுக்கு ஓட்டு போடுங்கள் என்று ஜக்கம்மா சொல்வதாக குடுகுடுப்பைக்காரர் குடுகுடுப்பை அடித்தவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தது மு.க. ஸ்டாலின் தான் அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று ஜக்கம்மா சொல்கிறார் என்று பல்வேறு தெருக்களிலும் சங்கரன்பந்தல் நீடூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடுகுடுப்பைக்காரர் வாயிலாக மு.க ஸ்டாலினுக்கு வாக்களிக்க கோரி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குடுகுடுப்பைகாரருடன் திமுக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Tags:    

Similar News