முதியவர் சடலம் கண்டெடுப்பு

சேலம் டவுன் ரயில் நிலைய நடை மேடை மேம்பாலத்தில் முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-27 16:56 GMT

முதியவர் சடலம் 

சேலம் டவுன் ரெயில்வே நடைமேடை பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து டவுன் ரெயில் நிலைய அதிகாரி செல்வி பிரியா ரெயில் நிலைய அதிகாரி அனுராக்குமார் சுக்லாவிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சேலம் ரெயில்வே நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் ஆரஞ்சு கலர் டீசர்ட்டும், வெள்ளை சிவப்பு நிறத்தில் கோடு போட்ட அரைகால் சட்டையும் அணிந்திருந்தார். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும் என போலீசார் கூறினர்.
Tags:    

Similar News