மூதாட்டி சடலமாக கோவில் தெப்பக்குளத்தில் மீட்பு

சங்கரன்கோவிலில் காணாமல் போன மூதாட்டி சடலமாக கோவில் தெப்பக்குளத்தில் மீட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-24 08:18 GMT
சங்கரன்கோவிலில் காணாமல் போன மூதாட்டி சடலமாக கோவில் தெப்பக்குளத்தில் மீட்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கிளாவடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி லட்சுமி (70). லட்சுமிக்கு மூன்று ஆண்கள் உள்ளனர். லட்சுமியின் மூன்றாவது மகன் பாலமுருகன் இறந்து விட்டதால் பாலமுருகன் மனைவி மாரியம்மாள் மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றனர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை சங்கரன் கோவில் ஓடை தெருவில் உள்ள ஆவுடைபொய்கை லட்சுமி சடலமாக இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் லட்சுமியின் மூன்றாவது மகன் பாலமுருகன் இறந்ததிலிருந்து மன வேதனை அடைந்துள்ளார்.

இதனையடுத்து கோவில் தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் லட்சுமியின் மகன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News