இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு
திண்டுக்கல் சோலைஹால் ரோடு அந்தோனியார் கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-06 10:09 GMT
பலி
திண்டுக்கல் குடை பாறை பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி செல்வி வயது 65. இவர் சோலைஹால் ரோடு அந்தோணியார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வி படுகாயம் அடைந்தார்.
இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மதியம் 12 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.