மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பேரணி நடந்தது.

Update: 2024-03-27 12:57 GMT

 புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பேரணி நடந்தது. 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பேரணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (27.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொ)) ஷியாமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News