திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி தேர்தல் பிரச்சாரம்...

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-08 05:13 GMT

பிரச்சாரம்

இந்தியா கூட்டனி கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் போட்டியிடுகிறார். இவர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் கூட்டனியான காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில சிறுபான்மை இன ஆணையத்தின் தலைவர் .பீட்டர் அல்போன்ஸ் இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தக்குடியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் KBA.செந்தில் ,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ,கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்,திமுக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News