நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரிக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு

புதிய வாக்காளர் இணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிகம் நடத்திய டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு மாநில தேர்தல் ஆணையம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.

Update: 2024-01-29 07:31 GMT

பாராட்டு சான்றிதழ்

இளம் வாக்காளர்களை புதியதாக அதிகம் சேர்த்தமைக்காகவும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளை அதிகம் நடத்தியமைக்காகவும் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு மாநில தேர்தல் ஆணையம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளது.

தேசிய வாக்காளர் தினமான 25.01.2024 அன்று சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தலைமை செயலர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, மாநில தேர்தல் ஆணையர் வீ. பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி டிரினிடி கல்லூரிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கல்லூரியின் சார்பில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர். ஏ. அனிதா, நோடல் அலுவலர் எஸ். அனிதா மற்றும் வாக்காளர் அமைப்பின் பிரதிநிதி பி. இந்துஜா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News