தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 

தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2024-03-21 16:49 GMT

கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (21.03.2024) கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் எஸ்.டி.ஷேஷாஸ்திரி  மற்றும் அபிஷேக் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கூறுகையில், வேட்பாளர்கள் தங்கள் செலவின கணக்குகளை உடனுக்குடன் உரிய ஆவணங்களுடன் உரிய நேரத்தில் தேர்தல் செலவின குழுவினரிடம் சமர்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் செலவின குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.      

இந்த கலந்தாய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம்,  முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,  உதவி தேர்தல் அலுவலர்கள்  எஸ்.காளீஸ்வரி   (நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி), எஸ்.கே.கனகராஜ் (குளச்சல்), செ.தமிழரசி (பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி), டி.சுப்பையா  (விளவங்கோடு சட்டமன்ற தொகுதி), ஜெ.லொரைட்டா (கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி), சுப்புலெட்சுமி (கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி), விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அலுவலர் சங்கரலிங்கம், தேர்தல் செலவின குழுவினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News