உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

போளூர் அருகே ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-27 04:18 GMT

பணம் பறிமுதல் 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் பைபாஸ் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . சோதனையில் வேலூர் பரதராமி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வந்த வாகனத்தில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.64, 600 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News