பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-04 15:47 GMT

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவ்வையார் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி கள் உள்ளனவா? என ஆய்வு செய்து, பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் மற்றும் காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் வாக்கு சாவடிகளில் அடிப்படை வச திகளை மேற்கொள்ளுமாறு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்கு அறிவுரை வழங்கினார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திண்டிவனம் தாசில்தார் சிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News