இந்தியாவில் தேர்தல் வினாடி வினா போட்டி: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இந்தியாவில் தேர்தல் வினாடி வினா போட்டியில் பங்கேற்க கரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-01-18 09:37 GMT

மாவட்ட ஆட்சியர் 

 தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, SVEEP திட்டத்தின்படி, மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் 11:15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் "https://www.erolls.tn.gov.in/Quiz2024"என்ற இணையதளம் முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போட்டியில் பங்கேற்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும்,

கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும் எனவும், "இந்தியாவில் தேர்தல்கள்" என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும் என கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும்,

இது தொடர்பாக தொடர்பு கொள்வதற்கு மாநில உதவி மையத்தை 1800 -4252 -1950 என்ற எண்ணிலோ, மாவட்ட உதவி மையத்தை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News