தேர்தல் விதிமீறல் : அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு

விழுப்புரத்தில் அனுமதியின்றி கட்சி கொடிகள், பேனர்கள் வைத்ததாக அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Update: 2024-03-27 05:02 GMT

காவல் நிலையம் 

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கரும்பு விவசாயி மண்டபத்தில், நேற்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்காக, அனுமதியின்றி அதிமுக சார்பில், 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டு, கூட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், அதிமுக நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 பேர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.
Tags:    

Similar News