வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

Update: 2023-11-05 00:41 GMT

ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் சுந்தரவள்ளி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான நடைபெற்றுவரும் சிறப்பு முகாம்கள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா தலைமையில், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள், சிவகங்கை மாவட்டத்தில் 04.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும், வருகின்ற 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும், சிறப்பு முகாம்கள், அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை / தேவகோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.இதற்கான முறையான அறிவிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இம்முகாம்களின் வாயிலாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்

சிறப்பு முகாம்களில், புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டைவகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

Tags:    

Similar News