தண்டவாள பராமரிப்பு பணியின் போது மின் விபத்து - பணியாளர்கள் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே தண்டவாளத்தில் பணியில் ஈடுப்பட்டு இருந்த வடமாநில ஒப்பந்த பணியாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-12-31 11:20 GMT

பைல் படம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே நெக்குந்தி தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் இரவு நேரத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதில் நந்த்லால் லகுரி(22), சூஜீகோபே (33), ஸ்ரீராம்லகுரி (31), துரந்த்(20) ஆகிய நான்கு வடமாநில பணியாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். சகப் பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த படுகாயம் அடைந்த துரந்த் என்பவரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News