மின் ஊழியர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Update: 2023-11-08 06:29 GMT
விழிப்புணர்வு கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் கோட்டத்தில் பணியாற்றும் மின் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர்கள் திருமலைவாசன், வேலுமணி, கோமதி செல்வி முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை பயிற்சி மையம் நிலை மேலாளர் விஜயகுமார், இளநிலை பொறியாளர்கள் அசோக்குமார், ராஜேந்திரன் ஆகியோர், மின் ஊழியர்கள் பணியின் போது பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மின்சாரம் முழுதும் துண்டிக்கப்பட்டதை உறுதி செய்த‌பின்னரே பணிகளை தொடங்க வேண்டும். போதையில் பணி செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பாதுகாப்பு நடவ்டிக்கைககள் குறித்து பேசினர்.
Tags:    

Similar News