வேலையின் போது தவறி விழுந்து எலக்ட்ரிசியன் உயிரிழப்பு
காரிமங்கலத்தில் வீட்டின் மேற்கூரையில் வேலை செய்த எலக்ட்ரீசியன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-22 09:08 GMT
எலக்ட்ரிசியன் பலி
கிருஷ்ணகிரி ஏ.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபதி இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் சேதுபதி ஏணியில் ஏறி மேற் கூரை தளத்தில்வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக கூரை உடைந்ததில், அவர் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சேதுபதி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.