மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

பள்ளி மாணவர்களை மேளதாளங்களுடன், ஆடல் பாடல்களோடு, குங்குமம் பொட்டிட்டு, பூங்கொத்து கொடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Update: 2024-06-11 06:23 GMT

மாணவர்களுக்கு வரவேற்பு 

திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் சூசை நகரிலுள்ள புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024 ஜுன் 10 பள்ளி துவக்க முதல் நாளில் தாளாளர் சகோ.பெனடிக்ட், தலைமையாசியர் முனைவர் சகோ.மதலை முத்து, இருபால் ஆசிரியர்கள்,மற்றும் சிறப்பு விருந்தினர்களான பத்தியாவரம் அன்புதாஸ், தர்மபாலன், தேன்மொழி அனைவரும் பள்ளி மாணவர்களை மேலதாளங்களுடன், ஆடல் பாடல்களோடு, குங்குமம் பொட்டிட்டு, பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி, மாணவர்களை வரவேற்று பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News