திருப்பூரில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

திருப்பூரில் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2024-04-14 13:02 GMT

சமத்துவ உறுதிமொழி ஏற்பு

புரட்சியாளர் அம்பேத்கர் 134 ஆவது பிறந்த நாள் விழா! ததீஒமு சார்பில் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பி புரட்சியாளர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,

திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், திருப்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.மேலும், சமத்துவ நாள் உறுதிமொழி வாசித்து, ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால்,

சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.பாலன், ததீஒமு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் ந.சஞ்சீவ் மற்றும் ராமர், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

Tags:    

Similar News