சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-13 14:08 GMT

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இதில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News