சமத்துவப் பொங்கல்
சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.
Update: 2024-01-13 04:59 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், நுகா்வோா் பாதுகாப்பு பேரவை முகமது அலி, திமுக வடக்கு மாவட்டப் பொருளாளா் இல,சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ விழாவை தொடக்கிவைத்தாா். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.