சென்னை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள்

திருப்பூரிலிருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

Update: 2023-12-06 07:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரிலிருந்து தண்ணீர் , பிஸ்கட் , சானிடரி நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னை மக்களுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் கேன் , பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு கண்டெய்னர் லாரிகளில் அனுப்பப்பட்டது. நேற்று இரவு 3 கண்டைனர் லாரிகள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது இரண்டு கண்டைனர் லாரிகள் அனுப்புவதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News