திருவாரூர்: முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூரில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-30 05:00 GMT

முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல் நில அளவீடுதல் ,ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 15 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் 23 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டனர் . இக்கூட்டத்தில் உதவி இயக்குனர் ,முன்னாள் படை வீரர்கள் நலன் மதியழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News