தேமுதிக நிறுவன தலைவர் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி..
ராசிபுரத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி..
By : King 24x7 Website
Update: 2023-12-28 10:26 GMT
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அனைத்து பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அவருக்கு தங்களது நினைவஞ்சலியும் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். அதன்படி தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் டி.எஸ். விஜய சரவணன், அவர்களின் ஆலோசனை பெயரில் ராசிபுரம் வடக்கு நகரக் கழகச் செயலாளர் இளையராஜா உத்தரவின் படி ராசிபுரம் நகர கழக நிர்வாகிகள், நகர கழக பொறுப்பாளர்கள், மற்றும் தொண்டர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர். இதேபோல் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியிலும் அவரது திருவுருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.