இலவச செயற்கைகால் வழங்க பரிசோதனை முகாம்
மாற்று திறனாளிகளுக்கு இலவச செயற்கைகால் வழங்க பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Update: 2024-01-29 05:13 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான இலவச செயற்கைகால் வழங்குவதற்கான பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டனர். இதில் செயற்கை கால் தேவைபடும் மாற்று திறனாளிகளுக்கு, செயற்கை கால் பொருத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அளவீடு பணி நடைப்பெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.