கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

Update: 2024-02-12 05:17 GMT

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் இருந்த 1,200 லிட்., சாராய ஊறலை போலீசார் அழித்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., தீபக்சிவாச் (பொ) உத்தரவின் பேரில், கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாம்பட்டி புதுார் மேற்கு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊரல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 6 பேரல்களில் இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.
Tags:    

Similar News