போலி டாக்டர் ஒருவர் கைது

திண்டுக்கல் அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-08 13:35 GMT

போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் காளிதாசை பிடித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் ஆவணங்கள் அனைத்தும் போலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மாத்திரை மருந்து கொடுப்பது மட்டுமில்லாமல் ஊசி போட்டு குளுக்கோஸ் ஏற்றுவது உட்பட பலவிதமான பணிகளையும் நோயாளிகளுக்கு செய்துள்ளார்.

இதனால் பல நோயாளிகள் ஒவ்வாமை ஏற்பட்டு திண்டுக்கல் அரசு@மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News