போலி டாக்டரின் கிளினிக்குக்கு சீல்

இலுப்பூரில் போலி டாக்டரின் கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-12-09 07:16 GMT

 இலுப்பூரில் போலி டாக்டரின் கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற் றிய இவர் இலுப்பூரில் கிளினிக் நடத்தி வந்தார். இங்கு சிகிச்சை பெற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின்பேரில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஸ்ரீப்ரியாதேன்மொழி தலைமையில் அலுவலர்கள் நேற்று மாலை காஜா மொய்தீன் கிளினிக்கில் சோதனை நடத்தினர். அதிகாரிகள் வருவதையறிந்ததும் அவர் தலைமறைவானார். கிளினிக்கில் இருந்த மருந்து, ஊசி, மாத்திரைகள், எடை மெஷின், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றி, கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

Similar News