கயத்தாறு அருகே குடும்பத் தகராறு: வாலிபர் பலி.

கயத்தாறு அருகே குடும்பத் தகராறில் பூச்சிகொல்லி மருந்தை  குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Update: 2024-01-19 14:54 GMT

கோப்பு படம் 

கயத்தாறு அருகே குடும்பத் தகராறில் பூச்சிகொல்லி மருந்தை  குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிழக்கிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. இவரது மகன் அபிலேஷ் (30). இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இதற்கிடையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் மனமுடைந்த அவர் பூச்சிகொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் படுத்துள்ளார். இதை பார்த்து பதறிய அவரது மனைவியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News