சேலத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

சேலத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை கைது செய்து போலீசார் விசாரணை.

Update: 2024-03-14 01:44 GMT

 கஞ்சா செடி

சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி கணவாய்காடு பகுதியை சேர்ந்த விவசாயி அப்பாவு (வயது 55). இவருடைய நிலத்தில் வாழை பயிர் செய்துள்ளார். வாழையின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடியை பயிரிட்டுள்ளதாக கிராம நிர்வாக அதி காரி விஜயகுமார் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் வாழைத்தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கஞ்சாசெடியை பிடுங்கினர். 2 கிலோ எடை உள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர், போலீசார் அப்பாவுவை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், கஞ்சா குடிக்கும் பழக்கம் கொண்ட அவர் தனது பயன் பாட்டிற்காக கஞ்சா செடியை பயிரிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் அவரை சேலம் மாநகர மதுவிலக்கு பிரிவில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News