பாராசூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
செய்யாறு அருகே பாராசூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிலம்பாட்டம், கோலப்போட்டி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படிருந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அருகே பாராசூர் கூட்டு ரோட்டில் செய்யாறு தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ராணி பெருமாள் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி. கே. மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
முன்னதாக பாரசூர் பகுதி இளைஞர்களின் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பாட்ட மானவர்கள் பல்வேறு வகையான கோலாட்ட பயிற்சிகளை செய்து காட்டினார், சிலம்பாட்டம் மாணவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தி அவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நூறு ரூபாய் பரிசாக வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிருக்கு லட்டு சில்வர் தட்டுகள் பெண்களுக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளரும் சேலைகளை வழங்கினர் இதனை தொடர்ந்து வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை வாங்கி சென்றனர்.
கோலப் போட்டியில் கோலங்களை போட்ட மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருவண்ணாமலை செய்யாறு தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், செய்யாறு நகர செயலாளர் வெங்கடேசன், அனக்காவூர் ஒன்றிய செயலாளர் துரை, ஜனார்த்தனன் பாராசூர் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.