விவசாயி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், தச்சர் பகுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-22 07:10 GMT
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகநாயகி இறந்து விட்டார். இதனால் மன விரக்தி அடைந்த மாரிமுத்து கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.