வேன் கதவு திறந்ததால் கீழே விழுந்த விவசாயி பலி

உறவினர் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேனில் சென்ற போது தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-18 01:15 GMT

பைல் படம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம், காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் விவசாயி சங்கா். இவா் தனது உறவினர் மோகன் மகளுக்கு மாப்பிள்ளை பாா்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 15 நபர்களுடன் மினி வேனில் நெமிலி அருகே உள்ள அரசங்குப்பம் கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. காட்டுப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் சென்றபோது மினி வேனின் பின்பக்க கதவு திடீரென திறந்துள்ளது.

அப்போது பின்பக்கம் கதவில் சாய்ந்து உட்காா்ந்திருந்த சங்கா், தருமன் (60), கோவிந்தராஜ் (50), வெங்கடேசன் (45) ஆகியோா் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனா். இதில் காயமடைந்த அவர்களை மீட்டு அதே வாகனத்தில் மேல்களத்தூா் துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனா். பலத்த காயம் அடைந்த சங்கா் மேல் சிகிச்சைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் சென்று சங்காின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News