கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாலவாடி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

Update: 2024-05-24 05:59 GMT

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது, கிணற்றில் அருகில் பைப்பில் தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த பைப்பை ராஜூ சரிசெய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தவறி கிணற்றில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News