பிஏபி கால்வாய் ஷட்டர் மீது நின்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கூடுதல் பாசன தண்ணீர் திறந்து விடக்கோரி பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய் மதகுகள் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

Update: 2024-04-22 09:01 GMT

 பொள்ளாச்சி.. ஏப்ரல்.22 பரம்பிகுளம்  ஆழியார் பாசனத் திட்டத்தின் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாவது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது,. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது,  இந்நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் கிளை கால்வாய்க்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே அரசு ஆணைப்படி கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி இன்று பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறி நின்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தண்ணீர் திறந்து விடக் கூறி கோஷங்களும் எழுப்பினர், தற்போது மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதாகவும், தற்போது திறந்துவிடபட்ட தண்ணீர் மூலம் கடைமடை விவசாயிகள் வரை பயன் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்..  விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரிகள் இதுவரை வராததாது கவலை அளிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் மேலும் கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வரை இதே பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News