நெல்லையில் விவசாயிகள் தீவிரம்

அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

Update: 2024-02-19 07:03 GMT

நெல்லையில் விவசாயிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையில் இன்று 19/02/24 காலை நிலவரப்படி 1504.75 கன அடி தண்ணீர் விவசாயத்திற்காக திறந்து விடப்படுகின்றது. அதை போல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு பிரதான அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News