திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்

பழனி, மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பழனி நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது‌.

Update: 2024-02-27 11:49 GMT

பழனி, மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பழனி நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது‌.

பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பழனி நகர அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது‌.

அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில், பழனி நகர அதிமுக செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ரவிமனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அன்வர்தீன், ராஜா முகமது, கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, 29வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முருகன், கார்த்திக் , இளைஞர் பாசறை ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News