விழுந்தது... 100 அடி உயர் கோபுர மின்விளக்கு

திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே உள்ள 100 அடி உயர் கோபுர மின்விளக்கு கீழே விழுந்ததில், ஒருவர் காயமடைந்தார்.

Update: 2023-12-28 07:11 GMT

  திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே உள்ள 100 அடி உயர் கோபுர மின்விளக்கு கீழே விழுந்ததில், ஒருவர் காயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே கடந்த 2008 ஆம் ஆண்டு 100 அடி உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருந்து வந்தது. அதனை பழுதுபார்க்க பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபுரத்தில் விளக்குகளை தாங்கி நிற்கும் கம்பி திடீரென அருந்தது. இதில் மின்விளக்கு கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் சிதறி ஓடினர். இதில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. உயர் கோபுர விளக்கை முறையாக பராமரிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் மாதம் ஒருமுறை இது போன்ற உயர் கோபுர விளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Tags:    

Similar News