குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை

சாணார்பட்டி அருகே கோணப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகனின் மனைவி, குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-04-02 07:45 GMT

பைல் படம்

சாணார்பட்டி அருகே கோணப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன். அவருடைய மனைவி சிவமணி (24). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிவமணி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News