சிவகங்கை அருகே பெண் தற்கொலை

சிவகங்கை அருகே மகனும், மகளும் உயிரிழந்த விரக்தியில் சிவகாமி என்பவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-19 12:27 GMT

சிவகங்கை அருகே மகனும், மகளும் உயிரிழந்த விரக்தியில் சிவகாமி என்பவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஒக்கூர் புதூரைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி சிவகாமி. குருசாமி சென்னையில் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இரண்டாவது மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார். மகனும், மகளும் இறந்ததால் சிவகாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News