கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை.

சென்னையில் தனது நிறுவன ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-04-18 03:52 GMT

பைல் படம் 

சென்னையில் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த நபரை கொலை செய்ய முயன்ற வழக்கில், நிதி நிறுவன உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த மாரிமுத்து தன்னை கத்தியால் தாக்கியதாக கார்மேகம் என்பவர் காவல் நிலையத்தில் கடந்த 2015 ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் நேற்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News