தீப்பற்றி இருந்த வைக்கோல் போர்

ராணிப்பேட்டை அருகே கால்நடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரில் திடீரென தீ ஏற்பட்டது.

Update: 2024-05-31 17:17 GMT

தீ விபத்து 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த பென்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடீரென தீப்பற்றியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் இது குறித்து தகவலின் பெயரில் போலீசார் வைக்கோலுக்கு தீ எப்படி வந்தது? வைக்கோலுக்கு யார் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News