சீலநாயக்கன்பட்டி மின் மயானம் பகுதியில் தீ விபத்து !

சேலம் சீலநாயக்கன்பட்டி மின் மயானம் பகுதியை சுற்றிலும் திடீரென தீ விபத்து. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-11 06:58 GMT

தீ விபத்து

சேலம் சீலநாயக்கன்பட்டி மின் மயானம் பகுதியை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. நேற்று இரவு இந்த செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் மின் மயானத்தை சுற்றிலும் உள்ள செடிகளில் தீ பரவி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் தீ பரவி விடும் என்ற பீதி அடைந்தனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே போன்று கன்னங்குறிச்சி பகுதியிலும் காட்டுப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News