வடக்கு புதூர் கிராமத்தில் முள்வேலியில் தீ விபத்து

தென்காசி மாவட்டம், வடக்கு புத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்தனர்.

Update: 2024-01-18 03:35 GMT
வடக்கு புதூர் கிராமத்தில் முள்வேலியில் தீ விபத்து
தென்காசி மாவட்டம்,  சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூர் கிராமத்தில் உள்ள மாயானத்தை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த முள்வேலியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட  அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News