அரசு மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு விளக்க முகாம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

Update: 2024-05-10 12:36 GMT

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் சார்பில், தீயணைப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் வீட்டு கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதனை அணைப்பது? தீயணைப்பு கருவிகள் மூலம் தீ அணைப்பது குறித்து விளக்கம் தருதல், நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. வெப்ப அலைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் டாக்டர் விஷ்ணுப்ரியா, உள்பட செவிலியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பங்கேற்றனர். தீயணைப்பு படையினர் செய்து காட்டிய முறையில், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் தீ அணைப்பு வழிமுறைகள் குறித்து தாங்களும் செய்து பார்த்தனர்.
Tags:    

Similar News