அரசுப்பள்ளியில் தீ தடுப்பு மற்றும் ஒத்திகை

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீ விபத்துக்களை தடுப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-02-29 07:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்ப பணி நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் முன்னிலையில் வருகின்ற கோடை காலங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்துக்களை தடுப்பது குறித்தும் தீ விபத்து மேலும் பரவாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

Tags:    

Similar News