அடிபட்ட புள்ளி மானுக்கு உதவிய தீயணைப்பு துறையினர்

காரைக்குடி அருகே அடிபட்ட புள்ளிமானை மீட்ட தீயணைப்பு வீரர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Update: 2024-03-03 08:51 GMT

காரைக்குடி அருகே அடிபட்ட புள்ளிமானை மீட்ட தீயணைப்பு வீரர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று காலில் படுகாயத்துடன் கிடந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் அதனை மீட்டு கழனிவாசலில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்து புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தனர்.

குன்றக்குடி காவல் துறையினர் புள்ளிமானை அடித்து விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News