இலங்கையில் மீனவர்கள் போராட்டம்

இலங்கையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இந்திய தூதரகம் முன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-20 11:44 GMT

இலங்கையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரம் முன் சென்றதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்றையதினம்  காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து பேரணியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் அவ் இடத்தை விட்டு அகன்று சென்ற நிலையில் மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News