மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-10 16:46 GMT

ஆட்சியர் ஆய்வு 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (10.04.2024) பார்வையிட்டார்.

உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News